தீர்த்த கரையினிலே - தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்.
வார்த்தை தவறி விட்டாய் - அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடி!
பார்த்த இடத்திலெல்லாம் - உன்னை போலவே
பாவை தெரியுதடி!
மேனி கொதிக்குதடி - தலை சுற்றியே
வேதனை செய்குதடி!
வாணி லிடத்தை எல்லாம் - இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோன திருக்குதடி! இந்த வையகம்
மூழ்கி துயிலினிலே,
நானொருவன் மட்டிலும் - பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?
Thanks to Bharathi, he reached almost all the human feelings. Its one of my favorite lyrics from his legends. Its about a dismal situation of a missed love.
Friday, January 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment